மேடையில் விழுந்த ட்ரோன்: அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் தேஜஸ்வி

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசிய மேடையில், திடீரென ட்ரோன் ஒன்று விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக தேஜஸ்வி காயமின்றி தப்பினார்.

பீஹாரின் காந்தி மைதானத்தில் வக்ப் சட்டத்துக்கு எதிரான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேஜஸ்வி மேடையின் முன் நின்று பேசி கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென ட்ரோன் வந்து, மேடையில் விழுந்தது. இதனை கவனித்த, தேஜஸ்வி உடனடியாக கீழே குனிந்தார். இதனையடுத்து அவருக்கு எந்த காயமும் இன்றி தப்பினார்.


இது குறித்து மாவட்ட எஸ்.பி., கூறுகையில், சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் வந்துள்ளது. அது போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். விரிவான விசாரணை நடத்தப்படும் என்றனர்.

Advertisement