புரவி எடுப்பு திருவிழாக்கள்

மேலுார் : உறங்கான்பட்டி நாட்டாமுத்தி அய்யனார் கோயிலில் ஆனி மாத புரவி எடுப்புத் திருவிழா நடந்தது. இதையொட்டி ஜூன் 22 முதல் பக்தர்கள் விரதமிருந்தனர். நேர்த்திக்கடன் நிறைவேறியவர்கள் மந்தையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது.

* கோட்ட நத்தாம் பட்டி சிறுவேஸ்வரி அம்மன் கோயில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 8 நாட்கள் விரதம் இருந்தனர். நேற்று வெள்ளலுார் மந்தையில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள அம்மன் கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement