மாநில விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

கமுதி : கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 4ம் ஆண்டு மாநில விளையாட்டு போட்டிகள் நடந்தது.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 வேளாண் கல்லுாரிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, சிலம்பம், டேபிள் டென்னிஸ் இருபாலருக்கும் தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. வென்றவர்களுக்கு கல்லுாரி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு எஸ்.பி.,சந்தீஷ் பரிசுகளை வழங்கினார். முதல்வர் திருவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement