புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

புதுச்சேரி : புதுச்சேரி 'லகு உத்யோக் பாரதி'யின் மாநில அளவிலான வருடாந்திர கருத்தரங்கு மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஓட்டல் அதிதியில் நடந்தது.
லகு உத்யோக் பாரதியின் தேசிய இணை பொதுச்செயலாலர் மோகன சுந்தரம், தேசிய துணை தலைவர் ஹரிஹரன், தேசிய செயர்க்குழு உருப்பினர் விஜயராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சங்கமாக செயல்படும், இந்த லகு உத்யோக் பாரதியின் புதிய நிர்வாகிகளாக தலைவராக விஸ்வேஸ்வரன், துணைத் தலைவர்களாக பாஸ்கரன், வேலுசாமி, அசோக், பொதுச் செயலாளராக சுரேஷ் பாபு, பொருளாளராக வேல்முருகன், துணை பொதுச் செயலாளார், 6 செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.
நிகழ்ச்சியில் டேலி அக்கவுன்டங்கிங் சாப்ட்வேர் நிறுவனர் சிபி, நிறுவனத்தின் செயல்திறன், குறு மற்றும் சிறு தொழிற்சாலை நடத்துபவர்களுக்கு கிடைக்கப் பெறும் நன்மைகள் குறித்து பேசினார்.
தமிழ்நாடு மாநில செயலாளர் ஜெயந்திரேன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'
-
பைக்குகள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
-
ஓமன் நோக்கி புறப்பட்ட எண்ணெய் கப்பலில் பற்றியது தீ; 14 இந்திய மாலுமிகள் மீட்பு
-
முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்கிறார் இ.பி.எஸ்.,!
-
வெறும் இணைப்பு தான்... பிணைப்பு இல்லை; அ.தி.மு.க., - பா.ஜ., குறித்து திருமா கருத்து
-
ஐதராபாத் கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் பலி; 20 பேர் காயம்