நெஞ்சு வலியால் ஆசிரியர் சாவு

புதுச்சேரி : தனியார் பள்ளி ஆசிரியர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

வானரப்பேட், 5வது கிராசை சேர்ந்தவர் ரமேஷ், 41; தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பைக்கில் அரியூரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார். பின் மாலை பணி முடிந்து வீட்டிற்கு வரும் போது மங்கலம் அருகே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சமபவ இடத்திலியே பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி சுகன்யா நிக்கே கொடுத்த புகாரின் பேரில், வில்லியனார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement