குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

அரியாங்குப்பம் : புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தி, ஒரு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, போலீ சார் சைக்கிள்களில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தி ஒரு ஆண்டுகள், இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அதையொட்டி, அரியாங்குப்பம் போலீசார் சார்பில், சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனார்.

ஊர்வலத்தில் சப் இன்ஸ் பெக்டர் முருகானந்தம் தலைமையில், பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் இருந்து, ஊர்வலம் புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் வாயிலை அடைந்தனர்.

நிகழ்ச்சியில், குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement