இளம் இந்திய அணி ஏமாற்றம்: யூத் ஒருநாள் போட்டியில்

நார்தாம்ப்டன்: இரண்டாவது யூத் ஒருநாள் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நார்தாம்ப்டனில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்கோத்ரா ஜோடி நம்பிக்கை தந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது வைபவ் (45 ரன், 3x6, 5x4) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய விஹான் (49), அபிக்யான் (32), ராகுல் குமார் (47), கனிஷ்க் சவுகான் (45) கைகொடுத்தனர். இந்திய அணி 49 ஓவரில், 290 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் தாமஸ் ரெவ் (131) சதம் கடந்து கைகொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. யுதாஜித் குஹா பந்துவீசினார். முதலிரண்டு பந்தில் 3 ரன் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய செபாஸ்டியன் மார்கன் வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மார்கன் (20), பிரெஞ்ச் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அம்ப்ரிஷ் 4 விக்கெட் வீழ்த்தினார்.