நவீன மருத்துவ வசதிகளுடன் பொன்னி மருத்துவமனை

பல்லடம், திருச்சி ரோடு, பச்சாம்பாளையம் பகுதியில் செயல்படும் பொன்னி மருத்துவமனை செயல்படுகிறது. மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:

நுாறு படுக்கைகள் கொண்ட நவீன கட்டடத்தில் மருத்துவமனை செயல்படுகிறது. 24 மணி நேர பிரசவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அவசர சிகிச்சைப்பிரிவு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

எலும்பு முறிவு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தலைக்காய சிகிச்சை பிரிவு, சிறுநீரகம் தொடர்பான நோய்கள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை வாயிலாக தீர்வு காணப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகள், பெண்களுக்கான பிரத்யேக சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. எம்.ஆர்.ஐ., ஸ்கேன், டயாலிசிஸ் வசதிகளும் உள்ளன. 24 மணி சிகிச்சை, அதிநவீன சி.டி., ஸ்கேன், முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் லேப் வசதி என, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நிகரான மருத்துவ வசதிகளுடன், உயிர்காக்கும் சிகிச்சை வழங்கி வருகிறோம். மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர், 04255 - 254177, 91595 54177 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement