ஓட்டுக்காக அவமதிப்பு!

பீஹாரில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., அடங்கிய, 'இண்டி' கூட்டணி ஓட்டு வங்கிக்காக வக்ப் திருத்த சட்டத்தை எதிர்க்கிறது. பார்லி.,யால் முறைப்படி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அக்கூட்டணியினர் அவமதிக்கின்றனர். இந்த கூட்டணியினர், கொல்லைப்புறமாக ஷரியா விதிகளை அமல்படுத்த விரும்புகின்றனர்.
சுதான்ஷு திரிவேதி
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
நாடு தழுவிய நெறிமுறைகள்!
ஒடிஷாவின் புரி ஜெகன்னாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததற்கு மாநில பா.ஜ., அரசே பொறுப்பு. அதிகளவில் பக்தர்கள் வருவர் என தெரிந்தும், போதுமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. கூட்டத்தை நிர்வகிக்க நாடு தழுவிய நிலையான நெறிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.
ரன்தீப் சுர்ஜேவாலா
பொதுச்செயலர், காங்.,
பா.ஜ.,வுக்கு புரியவில்லை!
நம் நாட்டுக்குள் வங்கதேசத்தவர்கள் சட்ட விரோதமாக ஊடுருவுவதை பற்றி பா.ஜ.,வினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதே சமயம், பாக்., - வங்கதேசம் ஆகிய நாடுகள் சீனாவுடன் நெருக்கம் காட்டுவதையும், அந்நாட்டுடன் கூட்டுப் பயிற்சி செய்வதையும் அவர்கள் புறக்கணிக்கின்றனர். அண்டை நாடுகளில் நிலவும் நிலைமையை பா.ஜ.,வால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அசாதுதீன் ஓவைசி
தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,
மேலும்
-
சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
-
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படை துணை முதல்வர் பேச்சு
-
தயாரிப்பாளர் சங்கம் - 'பெப்சி' பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமிக்க ஐகோர்ட் முடிவு
-
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
-
பயங்கரவாத வழக்கில் கைதானவர் சொத்து முடக்கம்; என்.ஐ.ஏ., நடவடிக்கை
-
புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் பதவியேற்பு