செவித்திறன் குறைபாடு மா.திறனாளிகள் மனு

ஈரோடு, ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணகுமுார் தலைமையில், வாய் பேச முடியாத, காது கோளாத மாற்றுத்திறனாளிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காது கேளாத மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி

தீர்வு காணப்படுவதில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், சைகை மொழி பெயர்ப்பாளர் இல்லாததால், எங்கள் குறைகளை முறையாக கேட்பது, புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண, கலெக்டர் தலைமையில் நிபுணர் குழு நியமித்து, தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement