அருள் எம்.எல்.ஏ., மீது பா.ம.க.,வினர் கொந்தளிப்பு

தர்மபுரி : தர்மபுரி, பா.ம.க., முன்னாள் எம்.பி., செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, பா.ம.க., தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கூட்டாக அளித்த பேட்டி:

பா.ம.க., தலைவர் அன்புமணியை, சேலம் -எம்.எல்.ஏ., அருள், விரும்பத்தகாத வார்த்தைகளால் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது.

தி.மு.க.,வுக்கு செல்வதற்காக அருள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு உள்ளார்.

அவர், பா.ம.க.,விற்காக, 18 முறை சிறை சென்றதாக தகவல் சொல்கிறார்; அது முழுக்க பொய். அவர், அரசியலில் தரகராக மாறி விட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement