த.வெ.க., ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் திடீர் அனுமதி
சென்னை : திருப்புவனம் அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு, சென்னை சிவானந்தா சாலையில், வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக வெற்றிக் கழகத்திற்கு, சென்னை போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்புவனத்தில், மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், நான்கு ஆண்டுகளில் நடந்த 24 காவல் நிலைய மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் வலியுறுத்தி, த.வெ.க., சார்பில் இன்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அன்றைய தேதியில் வேறு காரணத்திற்காக அந்த இடம் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறி, காவல் துறையால் மாற்று இடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சிவானந்தா சாலையில் வரும் 6 ம்தேதி காலை 10:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ஆனந்த் கூறியுள்ளார்.
மேலும்
-
கேரளாவில் அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: கடைகளுக்குள் புகுந்து சேதம்
-
போதைப்பொருள் கும்பல் தலைவன் கேரளாவில் கைது
-
மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மோதி ஒருவர் பலி
-
தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம்: 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு
-
என் உயிரே போனாலும் பரவாயில்லை; அஜித் குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி
-
எம்.பி., திறந்த குடிநீர் குழாய் விழா முடிந்ததும் திடீர் மாயம்