இதயம் காக்கும் இலை காய்கறிகள்

இலைகளை உடைய காய்கறிகளை உண்பது இதய நோய்களைக் குறைக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு. கீரை, பிராக்கலி, முட்டைக்கோஸ் முதலிய காய்கறிகளில் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது. இது இதயம், ரத்த நாளங்களை வலுப்படுத்தும். எனவே தினமும் இவற்றை உண்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகின் மிக முக்கியமான உடல் பிரச்னைகளில் ஒன்று இதயக் கோளாறு. ரத்த நாளங்களில் கொழுப்பு அடைக்கும்போது ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. பல உயிர்களை பறிக்கின்ற வாழ்வியல் முறை நோய் என்பதால் தான் இதை தடுக்கும் வழிகள் குறித்து உலகம் முழுக்க ஆய்வுகள் நடக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் உள்ள இசியு பல்கலையும், டேனிஷ் புற்றுநோய் மையமும் இணைந்து இது தொடர்பாக 14 ஆண்டுகள் ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சராசரியாக 75 வயதுடைய ஆஸ்திரேலிய பெண்கள் 1,436 பேரை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்கள் தினமும் தங்கள் உணவில் எவ்வளவு 'கே 1' வைட்டமின் எடுத்துக் கொள்கின்றனர் என்று தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதில் கே1 அதிகமாக உண்டவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்கள் தினமும் 120 மில்லி கிராமும், பெண்கள் 90 மில்லி கிராமும் கே1 வைட்டமின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கே1 வைட்டமின் ஒரு கப் கீரையில் 145 மில்லி கிராமும், அரை கப் பிராக்கலியில் 110 மில்லி கிராமும், அரை கப் முட்டைக்கோஸில் 82 மில்லி கிராமும் உள்ளது. எனவே தினமும் இவற்றை உண்டாலே உடலுக்குத் தேவையான கே 1சத்து கிடைத்துவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும்
-
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது: கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாக்., அணிக்கு மத்திய அரசு அனுமதி
-
மடப்புரம் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: பாதுகாப்பு தர திருமாவளவன் வலியுறுத்தல்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 82 பேர் பலி
-
ஹேக் ஆனது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சமூக வலைதளம்
-
கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி: திருமணமாகி 2 வாரத்தில் சோகம்!