மரணத்திலும் இணை பிரியாத தம்பதி

மூணாறு: இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி அருகே முரிக்கும்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜோய் 74. இவரது மனைவி என்ஷி 72, வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பதிக்கப்பட்டு ஜூலை 1ல் இறந்தார்.

இவர்களது மகன் ஜோதிஷ் வெளி நாட்டில் உள்ளதால், அவர் நாடு திரும்புவதற்கு வசதியாக என்ஷியின் இறுதி சடங்கு நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலுடன் காணப்பட்ட ஜோய் நேற்று காலை இறந்தார். இருவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது. மூன்று நாட்கள் இடைவெளியில் கணவன், மனைவி இறந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement