மீட்பு வாகனம் மீது பஸ் மோதி 10 பேர் காயம்
தலைவாசல், சேலத்தில் இருந்து, சென்னை நோக்கி, விழுப்புரம் கோட்ட அரசு பஸ், நேற்று அதிகாலை புறப்பட்டது. 3:00 மணிக்கு, சேலம் மாவட்டம் தலைவாசல், சாமியார்கிணறு பகுதியில் சென்றபோது, முன்புறம் சென்ற மீட்பு வாகனம்(ரெக்கவரி) மீது, பஸ் மோதியது.
இதில், பஸ்சின் முன் பகுதி, மீட்பு வாகன டிரைவர் சீட் பகுதி சேதமானது. பஸ்சில் பயணித்த, 30 பயணியரில், 10 பேர் லேசான காயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement