சீனியர் ஆடவர் வாலிபால் எஸ்.ஆர்.எம்., - ஐ.ஓ.பி., அணிகள் அரையிறுதிக்கு தகுதி
சென்னை, மாநில அளவில் நடக்கும் சீனியர் வாலிபால் போட்டியில், ஆடவர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., மற்றும் ஐ.ஓ.பி., அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவில் சீனியர் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, 71வது வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர், சென்னையில் நடந்து வருகிறது.
இதில், 24 அணிகள் மோதுகின்றன. ஆடவருக்கான காலிறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இதன் முதல் காலிறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 17, 16 - 25, 25 - 14, 25 - 14 என்ற செட் புள்ளிகளில், எதிர்த்து விளையாடிய சென்னை சுங்கத்துறை அணியை வீழ்த்தி, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது போட்டியில், ஐ.ஓ.பி., அணி, 25 - 17, 25 - 23, 25 - 18 என்ற செட் புள்ளிகளில், இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்
-
வியூகத்தை மாற்றிய குருவிகள் புது ரூட்டில் வருகிறது தங்கம்
Advertisement
Advertisement