வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த வலியுறுத்தல்



ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 57வது வார்டுக்கு உட்பட்ட கெட்டிநகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகில், நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் செல்கிறது. கரையின் மறுபக்கம் எல்.ஐ.சி., நகர் பகுதி அமைந்துள்ளது.


இந்த இரு பகுதிகளை இணைக்கும் விதமாக, வாய்க்கால் மீது சிறு பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகனம், ஆட்டோ, இலகு ரக பள்ளி வாகனம் சென்று வருகின்றன. பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால், பாதுகாப்பு தடுப்பு கம்பி பழுதாகி, பாலமும் வலுவிழந்துள்ளது. பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து ரக வாகனங்களும் செல்லும் வகையில் அகலமாக அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement