உலக குத்துச்சண்டை: சபாஷ் சாக் ஷி

அஸ்தானா: உலக கோப்பை குத்துச்சண்டையில் இந்தியாவின் சாக் ஷி தங்கம் வென்றார்.

கஜகஸ்தானில், உலக கோப்பை குத்துச்சண்டை 2வது சுற்று நடக்கிறது. பெண்களுக்கான 54 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் சாக் ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸ் மோதினர். இரண்டு முறை யூத் உலக சாம்பியன் பட்டம் வென்ற சாக் ஷி, 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இத்தொடரில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனையானார் சாக் ஷி.
மற்றொரு பைனலில் இந்தியாவின் மீனாட்சி (48 கி.கி.,) 2-3 என, கஜகஸ்தானின் நாசிமிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். இந்தியாவின் பூஜா ராணி (80 கி.கி.,) 0-5 என ஆஸ்திரேலியாவின் எசெட்டா பிளின்டிடம் தோல்வியடைந்தார். ஆண்களுக்கான 85 கி.கி., பிரிவு பைனலில் இந்தியாவின் ஜுக்னுா 0-5 என, கஜகஸ்தானின் பெக்சாத்திடம் வீழ்ந்தார்.

Advertisement