புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு, கோ பூஜை, அம்மனுக்கு ரக் ஷாபந்தனம், நான்காம் கால பூஜைகள், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

9:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்வில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு புத்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், வீதியுலா நடந்தது.

Advertisement