பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மை அறிமுகம்

புதுச்சேரி :புதுச்சேரி, முத்திரையார்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்தும் நோக்கில், 'இனியா ஸ்ரீ ' என்ற பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மையை பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த பேசும் பொம்மையில் ராஸ்பெர்ரி பை 3 போன்ற சிறிய கணினி அமைப்புகள், ஸ்பீக்கர், மைக்ரோ போன் மற்றும் இணைய வசதி பயன்படுத்தப்பட்டு, 5000 ஆங்கில சொற்கள் மற்றும் அவற்றின் விளக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் கடினமான ஆங்கில சொற்களின் அர்த்தங்களை, 'இனியா ஸ்ரீ ' யிடம் கேட்டவுடன், பொம்மை அழகான ஆங்கில உச்சரிப்பில் மாணவர்கள் கேட்ட வார்த்தைக்கு அதன் அர்த்தத்தை ஆங்கிலத்தில் தெளிவாக கூறுகிறது.
ஆங்கில ஆசிரியை பொம்மை 'இனியா ஸ்ரீ'யை பள்ளியின் அட்டல் டிங்கரிங் ஆய்வகத்தில் இருந்த கருவிகளை கொண்டு, இயற்பியல் ஆய்வகத்தில் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் பள்ளி ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.
பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள், 'இனியா ஸ்ரீ ' பேசும் ஆங்கில ஆசிரியை பொம்மையை எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தி, ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் பொருள் மற்றும் விளக்கங்களை கூறுதல், எதிர்சொற்கள், ஜோடிகள், இலக்கணக் கருத்துகள், வாக்கியங்களை அமைத்தல் போன்ற பல ஆங்கிலத் திறன்களை மகிழ்ச்சியான கற்றல் முறையில் வளர்க்கும் வகையில் உருவாக்குவோம் என்றார்.
மேலும்
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி
-
பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது கண்டதேவி கோவில் தேரோட்டம்!