வயிற்று வலி அவதி மாணவர் தற்கொலை  

நடுவீரப்பட்டு : வயிற்று வலியால் அவதியடைந்த கல்லுாரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் பாலகிருஷ்ணன்,20; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பாலகிருஷ்ணன் அடிக்கடி வயிற்று வலியால் அவதியடைந்தார். .

நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement