பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: சிரஞ்சீவி உள்ளிட்டோர் இரங்கல்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில், ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் கீரவாணியின் தந்தை சிவசக்தி தத்தா காலமானார். அவருக்கு வயது 92.



டோலிவுட்டின் பழம்பெரும் பாடலாசிரியர் சிவசக்தி தத்தா. இவர் பிரபல இசைமையப்பாளரும், ஆஸ்கர் வென்றவருமான கீரவாணியின் தந்தை. சிவசக்தி தத்தாவின் மூத்த சகோதரர் பெயர் எழுத்தாளர் விஜேயந்திர பிரசாத். இவர் பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் தந்தை ஆவார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்துக்கு இசையமைத்தவர் கீரவாணி.


வயோதிகம் காரணமாக சிவசக்தி தத்தா இன்று காலமானார். அவரின் மறைவை அறிந்த டோலிவுட் உலகம், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தமது இரங்கலை வெளியிட்டு உள்ளார்.


மறைந்த சிவசக்தி தத்தா பாடலாசிரியராக மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர். தெலுங்கு சினிமா உலகில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். சிவசக்தி தத்தாவின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

Advertisement