குமாரபாளையத்தில் கார் மோதி முதியவர் பலி


குமாரபாளையம், குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத கார் மோதி, முதியவர் பலியானார்.குமாரபாளையம் வட்டமலை, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முத்துவேல், 70, கூலி தொழிலாளி. இவர், சின்னப்பநாயக்கன்


பாளையம் பகுதியில் உள்ள, தன் தங்கையை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு, 7:15 மணியளவில் வட்டமலை, தனியார் கல்லுாரி எதிரில் ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கி, சேலம்-கோவை புறவழிச்சாலையை கடக்க நடந்து வந்தார்.


அப்போது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement