ஒரு மணி நேரம் ஸ்டிரைக்
வேடசந்துார்: வேடசந்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள 33 பஸ்களும் காலை முதல் செயல்பட்டது. மதியம் ஒரு மணிக்கு பணி மாற்றம் என்பதால் ஊழியர்கள் அலுவலகம் சென்று கையெழுத்திட்டு பஸ்களுடன் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். பஸ் முன் பகுதியில் வேடசந்துார் என போர்டு இருந்ததால் பயணிகள் எந்த பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என தெரியாமல் தவித்தனர். ஒரு மணி நேரம் நடந்த இந்த நுாதன போராட்டம் குறித்து போக்குவரத்து மேலாளருக்கு தெரிய வர ஓட்டுனர் , நடத்துநனர்களை எச்சரித்தார். அதன்பிறகு அனைத்து பஸ்களும் சென்றன.
போக்குவரத்து கழக மேலாளர் ஜெயகாந்தன் கூறுகையில்,'' வேலை நிறுத்தம் என்பதால் பலர் வேலைக்கு வரவில்லை. கூடுதல் பணி பார்க்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மதியம் சாப்பிட கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் தாமதம் ஆகிவிட்டது'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு
-
1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு; முக்கிய குற்றவாளி 28 ஆண்டுக்கு பிறகு கைது
-
ஆன்லைன் மோசடி; 71 பேர் கைது
-
நேர்மை கட்டணம்: அமெரிக்க விசா செலவு உயரும்
-
கோல்டன் விசாவில் சலுகையா; மறுக்கிறது யு.ஏ.இ., அரசு
-
இந்தியாவின் கழுத்தில் சீன கத்தி
Advertisement
Advertisement