10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் கூறி உள்ளார்.
@1brதமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 12) நடைபெற்றது. மொத்தம் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வர்கள் தேர்வை எழுதினர். சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றுக்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் சென்றார். அங்கு தேர்வு பணிகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;
ஒரு மாதத்தில் குரூப் 1 முதல்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதன்மை தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். கேள்வித்தாள் தயாரிப்பின் போது அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக் கூடாது என்று வல்லுநர்களிடம் அறிவுரை வழங்கி உள்ளோம்.
இன்றைய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த 3 மாதத்தில் வெளியிடப்படும். அடுத்து வரும் நாட்களில் 10 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. வினாத்தாள் எதுவும் கசியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி
-
விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு
-
வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள்: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு
-
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,
-
அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்; அண்ணாமலை கிண்டல்
-
பா.ம.க., எதிர்காலம் நான் தான்; சிங்கத்தின் கால்கள் பழுதுபடாது என்கிறார் ராமதாஸ்!
Advertisement
Advertisement