10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் கூறி உள்ளார்.


@1brதமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 12) நடைபெற்றது. மொத்தம் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வர்கள் தேர்வை எழுதினர். சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றுக்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் சென்றார். அங்கு தேர்வு பணிகளை அவர் பார்வையிட்டார்.


பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;


ஒரு மாதத்தில் குரூப் 1 முதல்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதன்மை தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். கேள்வித்தாள் தயாரிப்பின் போது அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக் கூடாது என்று வல்லுநர்களிடம் அறிவுரை வழங்கி உள்ளோம்.


இன்றைய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த 3 மாதத்தில் வெளியிடப்படும். அடுத்து வரும் நாட்களில் 10 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்.


குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. வினாத்தாள் எதுவும் கசியவில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement