சதம் விளாசினார் ஆயுஷ்: இளம் இந்திய ரன் குவிப்பு

பெக்கன்ஹாம்: முதல் 'யூத்' டெஸ்டில் இந்திய கேப்டன் ஆயுஷ் சதம் கடந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெக்கன்ஹாமில் முதல் டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (14) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ஆயுஷ் மத்ரே, விஹான் மல்ஹோத்ரா ஜோடி நம்பிக்கை தந்தது. ஆயுஷ் சதம் (102) விளாசினார். விஹான் அரைசதம் (67) கடந்தார்.


பின் இணைந்த அபிக்யான் (90), ராகுல் குமார் (85) கைகொடுத்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 450 ரன் எடுத்திருந்தது. அம்ப்ரிஷ் (31), ஹெனில் படேல் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அலெக்ஸ் கிரீன், ஜாக் ஹோம், ஆர்ச்சி வாகன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement