கன மழையால் கடும் நிலச்சரிவு; உயிர்தப்பிய ஹிமாச்சல் முன்னாள் முதல்வர்

மாண்டி: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருந்து பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் சென்ற கார் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதனால், அவர் உயிர்தப்பினார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மாண்டி மாவட்டம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டியில் மட்டும் 207 சாலைகள் உள்பட 249 சாலைகள் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, ஹிமாச்சலில் உள்ள 12 மாவட்டங்களில் பல இடங்களில் ஜூலை 18ம் தேதி வரையில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெய்ராம் தாகூர் சென்ற கார், நிலச்சரிவில் இருந்து சிக்காமல் தப்பியது. மழையால் பாதிக்கப்பட்ட செராஜ் பகுதியில் உள்ள கர்சோக்கிலிருந்து துனாக்கிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஷங்கர் டெஹ்ரா எனும் பகுதியில் அவர் கார் சென்ற சாலையில் கற்கள் உருண்டோடி விழுந்துள்ளன.
உடனடியாக காரை விட்டு இறங்கிய ஜெய்ராம் தாகூர், வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். இதன்மூலம், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.

மேலும்
-
800 பாட்டில்களில் இருந்த மதுபானம் காலி: எலி குடித்து விட்டதாக கூறி ஏமாற்றிய வர்த்தகர்கள்
-
விளையாடிய குழந்தைகள் குண்டு வெடிப்பில் பலி
-
ஹரித்துவாரில் சிக்கிய 125 கிலோ வெடிபொருட்கள்: கன்வர் யாத்திரை வழித்தடங்களில் உஷார்நிலை
-
மீனவர்களை மீட்க தூதரக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
-
வங்கதேசத்தில் ஹிந்து வியாபாரி கொலை; சடலத்தின் மீது நடனமாடிய கொடூரம்
-
இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி; சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் நெகிழ்ச்சி!