புதுச்சேரியில் மாடல் அழகி தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல்(25) தற்கொலை செய்து கொண்டார்.


புதுச்சேரி காராமணிகுப்பத்தில் வசித்து வந்தவர் சான் ரேச்சல். ' மிஸ் டார்க்குயின்', 'மிஸ் புதுச்சேரி' பட்டங்களை பெற்ற்றவர். உலகழகி பட்டம் பெற்ற இவர் பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரபலமான அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வந்தனர்.


இந்நிலையில், இன்று அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கான உறுதியான காரணம் குறித்து வெளியாகவில்லை.

Advertisement