மாம்பாக்கத்தில் 2 இடத்தில் 'ரெடிமேட்' தரைப்பாலம்

திருப்போரூர்:மாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு இடத்தில், 'ரெடிமேட் கான்கிரீட்' தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் - வண்டலுார் இடையே உள்ள மாம்பாக்கம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 4,000த்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். தவிர, தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.
மாம்பாக்கம் வழியாக திருப்போரூர் - தாம்பரம், கொளத்துார் - மேடவாக்கம், புங்கேரி - தாம்பரம், கோவளம் - தாம்பரம், மாமல்லபுரம் -- தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு தடம் சார்ந்த, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் முறையான வடிகால்வாய் வசதி இல்லாதது, சிறுபாலம் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால், மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிறது.
இதற்காக வடிகால்வாய், சிறுபாலம் அமைக்க, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையிலும், குறைதீர் கூட்டத்திலும் தொடர்ச்சியாக கோரிக்கை மனு அளித்து வந்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு இடத்தில், 'ரெடிமேட் கான்கிரீட்' தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி பலி கார் பலத்த சேதம்
-
விருந்துக்கு சென்ற இடத்தில் தகராறு பீர் பாட்டிலால் ஒருவர் குத்திகொலை
-
பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டி கேட்டவர் வீடு மீது பெட்ரோல் குண்டு 4 பேர் கைது
-
மகனை கொன்று தந்தை தற்கொலை
-
'சார்ஜிங்' மையத்தில் புகுந்த கார் மோதி சிறுவன் பலி
-
விவசாயி வீட்டில் 21 பவுன் நகை திருடிய உறவினர் கைது