சிவன்மலையில் களைகட்டிய 'ரேக்ளா'

திருப்பூர்; சிவன்மலை கிரிவலப்பாதையில், 2வது ஆண்டு ரேக்ளா பந்தய நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சிவன்மலை கோவில் அடிவார கிரிவலப்பாதையில், நேற்று ரேக்ளா பந்தயம் நடந்தது. காங்கயம் நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் தலைமையில், அமைச்சர் சாமிநாதன், ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்தார்.

காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை, உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து, 335 ரேக்ளா வண்டிகளும், 500க்கும் அதிகமான வீரர் களும் வந்திருந்தனர். போட்டி துாரத்தை குறைந்த நேரத்தில் கடந்த வீரர்களுக்கு பரிசுவழங்கப்பட்டது.

Advertisement