வி.ஏ.ஓ., கட்டடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்

திருவாலங்காடு:பழையனுாரில் சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சியில், அரசு பள்ளி எதிரே வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டடத்தில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சுவர்களில் ஈரம் படிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, விண்ணப்பிக்க வருவோர் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.
எனவே, சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
Advertisement
Advertisement