மாநகரில் பயன்பாடற்ற போலீஸ் கூண்டுகள் போக்குவரத்துக்கு இடையூறு என வருத்தம்

ஈரோடு: ஈரோடு மாநகரில் பயன்பாடற்ற போலீஸ் கூண்டுகள், போக்குவ-ரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
ஈரோடு மாநகரில் போக்குவரத்தை கண்காணிக்க, மாநகர தெருக்-களில் குறிப்பாக போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில், கூண்டு அமைத்து போலீசார் நியமிக்கப்பட்டனர். தற்போது கூண்டுகள் மட்டுமே உள்ளன. இவற்றில் பல ஆண்டுகளாக போலீசாரை பார்க்க முடிவதில்லை. இந்த வகையில் சத்தி சாலையில் இரு-வேறு இடங்கள், பெருந்துறை சாலையில் ஒரு இடம், சூரம்பட்டி நால்ரோட்டில் ஒரு இடத்தில் போலீஸ் கூண்டு உள்ளது.
போலீசார் இவற்றை பயன்படுத்தாத நிலையில் பிரச்னைக்குரிய போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளன. மேலும் வாகன ஓட்டி-களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: போலீஸ் கூண்டு-களை போலீசார் பயன்படுத்தாததால் துாசி படிந்து காணப்படு-கிறது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக சில இடங்களில் அமைந்துள்ளது. எனவே இவற்றை அகற்ற வேண்டும் அல்லது போலீசார் அமர்ந்து போக்குவரத்தை கண்கா-ணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

Advertisement