கொல்லிமலை பகுதியில் கள்ளச்சாராய விழிப்புணர்வு
நாமக்கல்: நாமக்கல் போலீஸ் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கொல்லிம-லையில் முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை, நவக்காடு வரை உள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என, நேரடி ஆய்வில் ஈடுபட்டார். அவருடன் மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., தனராசு கலந்துகொண்டார். ஆய்வின் போது, பழைய மது
விலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து அவர்க-ளது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்-சுவோர், விற்பனை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் அரசு கடும் சட்டம் இயற்றியுள்ளது; எனவே யாரும் கள்ளச்சாராய குற்-றங்களில் ஈடுபடக்கூடாது; கள்ளச்சாராயம் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்த, அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்; கள்ளச்சாராயம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொதுமக்-களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
எம்ஜிஆர் உடன் 26: சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்
-
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!