வன்னிவயல் கிராமத்தில்  உழவரைத்தேடி திட்டம்

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் வன்னிவயல் கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை -உழவர் நலத்துறை திட்ட நிகழ்ச்சி நடந்தது.

வேளாண்மை உதவி இயக்குநர் அம்பேத்குமார் தலைமை வகித்தார். வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினர்.

முகாமில் வேளாண்மை- உழவர் நலத்துறை மற்றும் சார்பு துறைகளுக்கான அனைத்து புதிய தொழில் நுட்பங்கள், திட்டங்கள், இயந்திரங்கள், கருவிகள், வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மற்றும் உழவன் செயலி சேவைகள் தொடர்பான விவரங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன. அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement