தடுக்கவும் வக்கில்லை இழப்பீடுக்கும் மனமில்லை

கடந்த 2024 மார்ச் மாதத்தில், சங்கரன்கோவிலில் காவல் துறையினர் தாக்கியதில், முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவை தி.மு.க., அரசு மதிக்காததால், காவல் துறையால் கணவனை இழந்த, மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண், கூலி வேலை செய்கிறார்.


திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கும், அரசு கொடுத்த வேலை மற்றும் நிலம் ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 'லாக்-அப்' மரணங்களை தடுக்க வக்கில்லை. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும் மனமில்லை.

- பழனிசாமி

பொதுச்செயலர், அ.தி.மு.க.,

Advertisement