இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
புதுச்சேரி : பெரியார் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, பெரியார் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை (16 ம் தேதி), நாளை மறுநாள் (17 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில், பெரியார் நகர், கோல்டன் அவென்யு, சாரதாம்பாள் நகர், மணக்குள விநாயகர் நகர், எஸ்.பி.ஐ., காலணி, ரத்னா நகர், அம்பாள் நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம், மருதம் நகர், ஆருத்ராநகர், முகாம்பிகை நகர், அஜீஸ்நகர், பவழநகர், எல்லைபிள்ளைச்சாவடி, திலகர் நகர், விவேகானந்தாநகர், வழுதாவூர் சாலை, கணபதி நகர், சித்தானந்தா நகர், மோகன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.
இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
டிரம்பின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சுப்ரீம்கோர்ட் ஒப்புதல்: கல்வித்துறையில் 1400 பேர் டிஸ்மிஸ்
-
சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்
-
போர் நிறுத்தத்தை நாங்கள் நம்பவில்லை, எந்தவொரு புதிய சாகசத்திற்கும் தயார்: ஈரான் புது அறிவிப்பு
-
நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!