முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

கடலுார் : கடலுார் வன்னியர்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கடலுார் வன்னியர்பாளையத்தில் வினை தீர்த்த விநாயகர், முத்து மாரியம்மன், அய்யனாரப்பன் கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது.

நேற்று காலை 10 மணிக்கு, யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., டாக்டர் பிரவீன் அய்யப்பன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement