பிரான்ஸ் தேசிய தினம் புதுச்சேரியில் கடைபிடிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி மக்கள், புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 14-ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, புதுச்சேரியில் 236-வது பிரான்ஸ் தேசிய தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் எட்டியென் ரோலண்ட்-பியக் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், இந்தியா, பிரான்ஸ் இரு நாட்டுதேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்
-
மிளகாய் பொடி தூவி, துப்பாக்கியால் சுட்டு இ.கம்யூ., பிரமுகர் படுகொலை; வாக்கிங்கின் போது பயங்கரம்
-
மும்பை ஏர்போர்ட்டில் சிக்கியது ரூ.62 கோடி கோகைன்: பிஸ்கட், சாக்லேட்டுகளில் கடத்திய பெண்
-
திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தார் 3வது நீதிபதி
-
ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி
-
சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
Advertisement
Advertisement