ஏ.டி.எம்., கார்டு மூலம் திருட்டு மர்ம நபரை தேடும் போலீசார்
கரூர், கரூரில், காகித ஆலை ஒப்பந்த தொழிலாளியின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், நடையனுார் இளங்கோ நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 55; புகழூர் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி. இவரது மகன் பரணிதரன் கடந்த, 10ல் தந்தை பாலசுப்பிர
மணியத்தின் ஏ.டி. எம்., மூலம், கரூர் பெரியார் நகரில் உள்ள டி.எம்.பி., ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். பிறகு, ஏ.டி.எம்., கார்டை அங்கேயே விட்டு விட்டார். அந்த கார்டை எடுத்த மர்ம நபர், 50 ஆயிரம் ரூபாயை அதன் மூலம் எடுத்து கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, பால சுப்பிரமணி போலீசில் புகார் கொடுத்தார். கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
Advertisement
Advertisement