கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!

21


சென்னை: கிணற்றுக்குள் இருக்கும் தவளை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கடுமையாக சாடியுள்ளார்.


அவரது பதிவு: கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என்று கருதிக் கொள்ளுமாம். அதுபோல் சீமான் எனும் தவளை தன்னைத் தவிர தமிழகத்தில் யாருமே போராடுவதில்லை என்று பிதற்றிக்கொண்டு திரிகிறது.


ரிதன்யாவுக்காக மாதர் சங்கம் எழுப்பிய குரல் கிணற்றுக்குள் இருந்த சீமான் தவளைக்கு கேட்காமல் போயிருக்கலாம். இவ்வாறு சண்முகம் கூறியுள்ளார்.


நிருபர்கள் சந்திப்பில் பேசிய சீமான், ''ரிதன்யா தற்கொலை சம்பவத்தில் அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாதர் சங்கங்கள், பெண்ணியவாதிகள் என யாரும் பேசவில்லை.

எல்லோரும் எங்கே சென்றீர்கள்? கொக்கைன், கஞ்சா, டாஸ்மாக் சரக்கைக் குடித்துவிட்டு படுத்துவிட்டீர்களா? என கூறியிருந்தார். தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில், இவ்வாறு சண்முகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement