கால்நடை தொழுவமாக மாறிய சிறுவர் விளையாட்டு பூங்கா

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா கால்நடைகள் கட்டும் தொழுவமாக மாறியுள்ளது.
காரைக்கால், கோவில்பத்து பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோவில் எதிரே குளக்கரை அருகில் சிறுவர் விளையாட்டு பூங்கா பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால் சிறுவர் பூங்கா சரியான முறையில் பரமாரிப்பு இல்லாமல் உள்ளது. சிறுவர்களுக்கு விளையாடும் பூங்காவில் தற்போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டி வருகின்றனர்.
மேலும் பூங்காவை சுற்றி கோவில், பள்ளிகள் உள்ள நிலையில், பல ஆண்டுகளாக சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் குப்பை கூடாரமாக மாறி வருகிறது. பூங்காவில் உள்ள உஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் சிறுவர் பூங்காவை சீர்செய்து சிறுவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
-
நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரூ கிரிக்கெட் அணியே முழு பொறுப்பு என்கிறது கர்நாடகா அரசு
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்