மின்தடை ஏற்படுத்தி வசூலித்தவர் கைது

கொடைக்கானல்,: கொடைக்கானல் கவுஞ்சியை சேர்ந்தவர் எலக்ட்ரிஷயன் கதிரவன் 38. இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை சீர் செய்து வந்துள்ளார்.

இப்பகுதியில் சில வாரங்களாக தொடர் மின்தடை ஏற்பட அதை சீர் செய்வதற்காக மின்வயர்களை சேதம் செய்து பண வசூலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரில் விசாரித்த மின் ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். உதவி பொறியாளார் குமார் புகாரில் போலீசார் கதிரவனை கைது செய்தனர்.

Advertisement