தர்மபுரி, நல்லம்பள்ளியில் மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
தர்மபுரி, தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை, 4:45 மணி முதல் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
தொடர்ந்து, 6:15 முதல், தர்மபுரி மற்றும் அதன் கூற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. தர்மபுரி டவுன், பகுதி மற்றும் இலக்கியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சாலைகள் வெறிச்சோடிய நிலையில், வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்ட படி வாகனத்தை ஓட்டி சென்றனர். கிராம பகுதிகளில், மானாவாரி விவசாயம் செய்திருந்த விவசாயிகள், கனமழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement