பட்டா மாறுதல் செய்து தராததால் அபராதம் வழங்கிய தாசில்தார்
சேந்தமங்கலம், பட்டா மாறுதல் செய்து தராததால், மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவுப்படி தாசில்தார், 25,000 ரூபாய் அபராதம் வழங்கினார்.
சேந்தமங்கலம், துாசூர் கணவாய்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார், 43; இவர், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பெயரில் இருந்த பட்டாவை, 2015ல் தான செட்டில்மென்ட் செய்து பத்திரப்பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து, 2018ல் பட்டா பெயர் மாற்றம் கோரி சேந்தமங்கலம் தாசில்தாருக்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி இருந்தார். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனுதாரர் சசிக்குமார் மாநில தகவல் ஆணையத்தை அணுகியிருந்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், பட்டா மாறுதல் தொடர்பாக கோரிய தகவல்களை வழங்காத சேந்தமங்கலம் தாசில்தாருக்கு, 25,000 ரூபாய் அபராதம், மனுதாரருக்கு பட்டா மாறுதல் செய்து தரவேண்டும் என, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அதர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நேற்று மாலை சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த மனுதாரர் சசிக்குமாரிடம், 25,000 ரூபாய் அபராதம், அவருடைய பெயருக்கு பட்டா மாறுதல் செய்த பத்திரமும், பொது தகவல் அலுவலர் கோமதி வழங்கினார்.
மேலும்
-
தி.மு.க.,வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? திருச்சி சிவாவுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
-
ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி; இதில் என்ன பெருமை என முதல்வருக்கு சீமான் கேள்வி
-
8வது முறையாக துாய்மை நகரம் விருதை வென்றது இந்தூர்; சென்னைக்கும் விருது
-
ஒட்டு கேட்கும் விவகாரம் 3 நாட்களில் அம்பலத்திற்கு வரும்: சொல்கிறார் ராமதாஸ்
-
பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் 33 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
மஹா.,வில் கார்- பைக் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு