திருக்கோவிலுாரில் பா.ம.க., ஆண்டு விழா

திருக்கோவிலுார் : கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில், திருக்கோவிலுாரில் கட்சியின் 37ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.

திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில், பா.ம.க.,வினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் டெல்லி சேகர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணகுமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் துரைமுத்துகுமரன், சடையன், மாவட்ட துணை தலைவர்கள் ஞானவேல், வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement