கீரப்பாளையத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

புவனகிரி : கீரப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நேற்று துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கீரப்பாளையம், வயலுார் மற்றும் சி.மேலவன்னியூர் ஆகிய ஊராட்சிகளுக்கு சிறப்பு முகாம் கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கலால் உதவி ஆணையர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன்,ஆனந்தன், தாசில்தார் கீதா முன்னிலை வகித்தனர். துனை பி.டி.ஓ., சபிதாரவி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சபாநாயகம், வாள்காரைமேடு பாலு, திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.
ஊராட்சி செயலாளர் தங்கமுருகவேல் நன்றி கூறினார்.
மேலும்
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து
-
மருத்துவமனையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பரோலில் வந்த கைதி பலி
-
அவமானப்படுகிறோம் என சொல்வது உண்மையல்ல: சமாளிக்கிறார் திருமாவளவன்
-
பிரிட்டனில் மூன்று பேரின் டி.என்.ஏ.,விலிருந்து பிறந்த ஆரோக்கியமான 8 குழந்தைகள்; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்!