' கொடை'யில் சூறைக்காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று காலை முதல் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்தது. சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் சூறைக்காற்று வீச மாலை வரை சாரல் மழை நீடித்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் முடங்கினர். குறைந்த அளவிலான பயணிகளை மட்டுமே சுற்றுலா தலங்களில் காண முடிந்தது. குளிரை சமாளிக்க ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து பயணிகள் நடமாடினர். இந்நிலை தாண்டிக்குடி கீழ் மலை பகுதிகளிலும் நீடித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
-
இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு
-
துாய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின்னடைவுக்கு கண்டனம்
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேரை விடுவித்தது நீதிமன்றம்
Advertisement
Advertisement