'கொடை'யில் பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்: -திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வார விடுமுறையை அடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம், லேசாக பெய்த சாரல் மழை என ரம்மியமான சூழல் நேற்று நிலவியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

Advertisement