திருப்பதிக்கு 500 பக்தர்கள் பாதயாத்திரை

சூளகிரி: சூளகிரி அருகே கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்-வர சுவாமி கோவிலில் இருந்து ஆண்டுதோறும் திருமலை திருப்-பதி கோவிலுக்கு, வெங்கடேஸ்வரா சேவா டிரஸ்ட் சார்பில், சனா-தன தர்ம சைத்தன்ய பாத யாத்திரை பயணம் மேற்கொள்ளப்-பட்டு வருகிறது. 10ம் ஆண்டு பாத யாத்திரை நேற்று முன்தினம் துவங்கியது.


முன்னதாக, தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன. சூளகிரி, காமன்தொட்டி உட்-பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்-தர்கள், திருமலை திருப்பதி நோக்கி பாத யாத்திரையை துவங்-கினர்.தினமும் அதிகபட்சம், 35 கி.மீ., துாரம் பயணம் செய்யும் பாத யாத்திரை குழுவினர் வரும், 25ம் தேதி, திருமலை திருப்பதி கோவிலை சென்றடைய உள்ளனர்.
அதேபோல், தேன்கனிக்கோட்டை வெங்கடேஸ்வரா சுவாமி பாத யாத்திரை கமிட்டி சார்பில், 13ம் ஆண்டு சனாதன தர்ம சைத்-தன்ய பாத யாத்திரை நேற்று முன்தினம் புறப்பட்டது.
தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்ம சுவாமி, பேட்டராய சுவாமி, ராம ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையை துவங்கினர்.
வரும், 25ம் தேதி பக்தர்கள் கோவில் சென்றடைய உள்ளனர். தினமும், 40 கி.மீ., வீதம், 290 கி.மீ., துாரம், ஹரிநாம பஜ-னையை இசைத்தப்படி பக்தர்கள் நடந்து சென்று கோவிலை அடைகின்றனர்.

Advertisement