விவசாயி வீட்டில் 7 பவுன் திருட்டு

சேலம்: சேலம், வீராணம் அருகே சுக்கம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, விவசாயி தமிழரசன், 38. இவர் நேற்று முன்-தினம் குடும்பத்துடன், கோவிலுக்கு சென்றுவிட்டு, இரவு வீட்-டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்-தது.


உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்-றது தெரிந்தது. இதுகுறித்து தமிழரசன் புகார்படி, வீராணம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
தமிழரசன் குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் எனக் கூறிய போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement